ஆனந்த்பாபு சேர்ந்தான் என்றுதான் பெஸ்ட் ட்யூஷன் சென்ட்டரில் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்) சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு ட்யூஷன் சென்ட்டர்கள் பெரும்பாலும் 3 திரைப்படத்தில் படவா கோபியின் வகுப்பறை போன்றே இருக்கும். அந்த நேரம் அந்த ட்யூஷன் வாத்தியாருக்கு பிரச்சினை போல. ஒரு வாரமாகியும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை. ஏனைய நண்பர்கள் எல்லாம் தங்கவேல் சார் ட்யூஷனில் சேர்ந்துவிட்டனர். அவரிடம் ஏற்கனவே போய் கேட்டதற்கு ஆட்கள் அதிகம் என்று சொல்லி விரட்டிவிட்டார்.
ஆனந்த்பாபு எப்படியோ சேர்ந்து விட்டான். அப்புறம் G.ராஜேஷோடு அவர் வீட்டுக்கு போய் அவரை குடையாய் குடைந்து சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்த அவர் எரிச்சலாகி இதோ பாரு உட்கார்ந்து படிக்க இடமில்லை. நின்னுக்கிறையா என்றார். G.ராஜேஷ் சரி சொல்லு எனச் சொல்ல நானும் தலையாட்ட சரி போ என்றார். நான் அவர் ட்யூஷனில் போய் உட்கார்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்கிற பையன்களெல்லாம் சேர்ந்து கொஞ்சம் இடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு இரண்டாவதாக வகுப்பெடுக்க வந்த தங்கவேல் சார் என் அவஸ்தையை பார்த்து இதுக்குத் தான் சொன்னேன் வேண்டாமென்று என்றார். நான் இளித்தபடியே பரவாயில்லை சார் என்றேன்.
தங்கவேல் சார் ட்யூஷனில் சுந்தரேசன் சார் கணக்கும் இரத்தினசபாபதி சார் அறிவியல் பாடமும் எடுத்தார்கள். இதில் இரத்தினசபாபதி சார் எடுக்கும் அறிவியலை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. எனக்கு பள்ளியில் சம்பத் சார் நடத்துவதே போதுமானதாக இருந்தது. ஆனால் சுந்தரேசன் சாரிடம் அப்படி அல்ல. அவர் நடத்துவதை கேட்பதே ஆனந்தமாக இருந்தது. Algebra trigonometry எல்லாம் அவர் கேட்க நான் விடை சொல்ல அவர் பாராட்டுவதெல்லாம் தெவிட்டாத நினைவுகள். அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் "என்ன கல்யாணராமா திருமணஞ்சேரி போனியா". நான் உடனே "இல்ல சார்" என வழிவேன். பிரம்பை செல்லமாக தலையில் தட்டிவிட்டுப் போவார்.
தங்கவேல் சாரின் கவனத்தை ஈர்க்க நான் கொஞ்சம் படாத பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய கெட்ட நேரம் நிறைய பல்புகள் வாங்கினேன். குறிப்பாக இரத்தினசபாபதிசார் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் நானும் அருண் எனும் நண்பனும் விரல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவர் வகுப்பின் போது எங்கள் இருவரையும் எழுப்பினார். "நீங்க ரெண்டு பேரும் விரல நாமம் மாதிரி வெச்சுகிட்டு விளையாட்றீங்க. இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் நாமம் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். சீ உக்காரு" என்றார். சரி என்றைக்காவது இவரிடம் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.
தங்கவேல் சார் ட்யூஷனில் நிறைய தேர்வுகள் நடத்துவார் எல்லா பாடங்களுக்கும். தேர்வு எழுதுபவர்களை குழுவாக பிரிப்பார். நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமார் மாணவர்கள், ரொம்ப சுமார் மாணவர்கள் எல்லோரையும் கலந்து குழுவாக பிரிப்பார். குழு மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பெற்ற குழுவுக்கும் இரண்டாமிடம் பெற்ற குழுவுக்கும் பரிசுகள் தருவார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு யுக்தியாக கையாள்வார். இன்றும் நான் வேலைக்கு நேர்முகத்தேர்வு நடத்தி என் டீமை இப்படித்தான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலக்காரணம் தங்கவேல் சார் தான். அதேபோல் என் அலுவலக நண்பர்களுக்கு நான் பரிசுகள் வாங்கித் தரும் முறையிலும் தங்கவேல்சாரையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.
i.e என்ற வார்த்தைக்கு பொருள் சொன்னது, போர்-war வார்-pour என்று வார்த்தை ஜாலம் செய்தது, உலகப்போர்களை அதிரடிக்கதைகளாக சொல்லிக்கொடுத்தது என தங்கவேல் சார் பற்றிய கதைகள் நிறைய சொல்லலாம். நான் தொழில்நுட்ப கல்வி பயிலும்போதே பணி ஓய்வுபெற்று ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடங்கள் கழித்து மதுவின் கல்யாணத்திற்காக சீர்காழி சென்றபோது சாரை சந்தித்தேன். அவருக்கு என்னை பற்றி எந்த நினைவுமில்லை. என்ன கதை சொல்லியும் அவருக்கு நினைவூட்ட முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஒரு வயதான மனிதர் தன் இளைய நண்பருடன் உரையாடுவதுபோல பேசினார்.
ஊர் திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை திரும்பினேன். என்னோடு கைக்குலுக்கினார். உள்ளே இருந்த கல்யாண ராமன் குதுகலித்தான். வரும்போது நினைத்துக் கொண்டேன் அவர் சொல்லிக் கொடுத்த உலகப்போர் வரலாறும் காரணமாக இருக்கலாம் என் சினிமா ஆர்வத்திற்கு. சார் என்னை மறந்து போவது இயற்கை தான். பறவைகளுக்குத்தான் வசித்த ஆலமரம் நினைவில் இருக்க வேண்டும். எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் நினைவில் S.m.h.s School groundல் மாலை வேளையில் கால்பந்தை துரத்திக் கொண்டு முதல் மனிதராக வரிவரியான டிஷர்ட்டில் தங்கவேல் சார் கடந்து போகிறார் மின்னல் என.
ஆனந்த்பாபு எப்படியோ சேர்ந்து விட்டான். அப்புறம் G.ராஜேஷோடு அவர் வீட்டுக்கு போய் அவரை குடையாய் குடைந்து சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்த அவர் எரிச்சலாகி இதோ பாரு உட்கார்ந்து படிக்க இடமில்லை. நின்னுக்கிறையா என்றார். G.ராஜேஷ் சரி சொல்லு எனச் சொல்ல நானும் தலையாட்ட சரி போ என்றார். நான் அவர் ட்யூஷனில் போய் உட்கார்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்கிற பையன்களெல்லாம் சேர்ந்து கொஞ்சம் இடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு இரண்டாவதாக வகுப்பெடுக்க வந்த தங்கவேல் சார் என் அவஸ்தையை பார்த்து இதுக்குத் தான் சொன்னேன் வேண்டாமென்று என்றார். நான் இளித்தபடியே பரவாயில்லை சார் என்றேன்.
தங்கவேல் சார் ட்யூஷனில் சுந்தரேசன் சார் கணக்கும் இரத்தினசபாபதி சார் அறிவியல் பாடமும் எடுத்தார்கள். இதில் இரத்தினசபாபதி சார் எடுக்கும் அறிவியலை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. எனக்கு பள்ளியில் சம்பத் சார் நடத்துவதே போதுமானதாக இருந்தது. ஆனால் சுந்தரேசன் சாரிடம் அப்படி அல்ல. அவர் நடத்துவதை கேட்பதே ஆனந்தமாக இருந்தது. Algebra trigonometry எல்லாம் அவர் கேட்க நான் விடை சொல்ல அவர் பாராட்டுவதெல்லாம் தெவிட்டாத நினைவுகள். அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் "என்ன கல்யாணராமா திருமணஞ்சேரி போனியா". நான் உடனே "இல்ல சார்" என வழிவேன். பிரம்பை செல்லமாக தலையில் தட்டிவிட்டுப் போவார்.
தங்கவேல் சாரின் கவனத்தை ஈர்க்க நான் கொஞ்சம் படாத பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய கெட்ட நேரம் நிறைய பல்புகள் வாங்கினேன். குறிப்பாக இரத்தினசபாபதிசார் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் நானும் அருண் எனும் நண்பனும் விரல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவர் வகுப்பின் போது எங்கள் இருவரையும் எழுப்பினார். "நீங்க ரெண்டு பேரும் விரல நாமம் மாதிரி வெச்சுகிட்டு விளையாட்றீங்க. இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் நாமம் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். சீ உக்காரு" என்றார். சரி என்றைக்காவது இவரிடம் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.
தங்கவேல் சார் ட்யூஷனில் நிறைய தேர்வுகள் நடத்துவார் எல்லா பாடங்களுக்கும். தேர்வு எழுதுபவர்களை குழுவாக பிரிப்பார். நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமார் மாணவர்கள், ரொம்ப சுமார் மாணவர்கள் எல்லோரையும் கலந்து குழுவாக பிரிப்பார். குழு மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பெற்ற குழுவுக்கும் இரண்டாமிடம் பெற்ற குழுவுக்கும் பரிசுகள் தருவார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு யுக்தியாக கையாள்வார். இன்றும் நான் வேலைக்கு நேர்முகத்தேர்வு நடத்தி என் டீமை இப்படித்தான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலக்காரணம் தங்கவேல் சார் தான். அதேபோல் என் அலுவலக நண்பர்களுக்கு நான் பரிசுகள் வாங்கித் தரும் முறையிலும் தங்கவேல்சாரையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.
i.e என்ற வார்த்தைக்கு பொருள் சொன்னது, போர்-war வார்-pour என்று வார்த்தை ஜாலம் செய்தது, உலகப்போர்களை அதிரடிக்கதைகளாக சொல்லிக்கொடுத்தது என தங்கவேல் சார் பற்றிய கதைகள் நிறைய சொல்லலாம். நான் தொழில்நுட்ப கல்வி பயிலும்போதே பணி ஓய்வுபெற்று ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடங்கள் கழித்து மதுவின் கல்யாணத்திற்காக சீர்காழி சென்றபோது சாரை சந்தித்தேன். அவருக்கு என்னை பற்றி எந்த நினைவுமில்லை. என்ன கதை சொல்லியும் அவருக்கு நினைவூட்ட முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஒரு வயதான மனிதர் தன் இளைய நண்பருடன் உரையாடுவதுபோல பேசினார்.
ஊர் திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை திரும்பினேன். என்னோடு கைக்குலுக்கினார். உள்ளே இருந்த கல்யாண ராமன் குதுகலித்தான். வரும்போது நினைத்துக் கொண்டேன் அவர் சொல்லிக் கொடுத்த உலகப்போர் வரலாறும் காரணமாக இருக்கலாம் என் சினிமா ஆர்வத்திற்கு. சார் என்னை மறந்து போவது இயற்கை தான். பறவைகளுக்குத்தான் வசித்த ஆலமரம் நினைவில் இருக்க வேண்டும். எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் நினைவில் S.m.h.s School groundல் மாலை வேளையில் கால்பந்தை துரத்திக் கொண்டு முதல் மனிதராக வரிவரியான டிஷர்ட்டில் தங்கவேல் சார் கடந்து போகிறார் மின்னல் என.